Friday, September 25, 2009

"----------------------" Quite"

குருத்தானாலும்! தமிழனாய்ப் பிறந்ததால் கருகினர்!
விடுதலைக்குப் போராடும் இனத்தின் மொட்டுக்கள் கேட்பாரின்றி வதங்கினர்.

குமுதினிப் படகுப் படுகொலை, நவாலிப்படுகொலை என்று வன்னிப் பெருஞ் சமர் வரை பிஞ்சுகளின் படுகொலை தொடர்கிறது. சிங்களம் என்றுமே தமிழீழத் தாய்நிலத்தில் எங்களை வாழ விடப்போவதில்லை.

அது கொடுத்தேன், இது கொடுத்தேன். ஊர்வலத்துக்கு போனேன், அஞ்சலிக்குப் போனேன் என்றெல்லாம் இருந்ததால் தான், இன்று நாதியற்று நிற்கிறது தமிழினம்.
போராட்டத்தின் பல பரிணாமங்களில், இன்று புலம் பெயர்ந்த எங்கள் ஒவ்வொருவர் கையிலும் தான் தமிழினத்தின் எதிர்காலமே உள்ளது. அது சிறை பிடிக்கப் பட்ட எமது மக்களின் விடுதலையாகட்டும், எமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமாகட்டும் அவர் செய்வார் என்ற களம் இப்போது இல்லை.

வரலாறு புலம் பெயர்ந்த எம்மீது சுமத்தியுள்ள காலக் கடமையை உணர்ந்து, அறிவுபூர்வமாக, ஒவ்வொருவரும் சிந்தித்து அரசியல் போராட்ட முன்னெடுப்புகளைத் தொடரவேண்டும்.

உலகத் தமிழர் பேரவை GTF (http://globaltamilforum.org/) , அதனுடன் கை கோர்த்துள்ள நாடு சார்ந்த அமைப்புகளைப் பலப் படுத்துவதுடன், தவறாது ஒவ்வொரு முன்னெடுப்புகளிலும் கை கோர்ப்பது நல்ல தொடக்கமாக அமையும். எமக்க எவரும் போராட மாட்டர்கள் என்பது, காலம் கற்பித்த பாடம். அடையாளம் தெரியாத இனமாக எம் சந்ததி வாழ்வதா?, இல்லை அழிவின் விளிம்பிலும் துளிர்த்து விருட்சமாகிய ஜூத இனம் போல் எழுச்சி கொள்வதா?

மீண்டும் சொல்கிறேன், புலம் பெயர்ந்த எங்கள் ஒவ்வொருவர் கையிலும் தான் தமிழினத்தின் எதிர்காலமே உள்ளது.

கேட்பாரின்றிக் குதறப்பட்ட, ஒவ்வொரு தமிழ் உயிரும், எம்மீதுள்ள நம்பிக்கையால் தான் போராடின. வதை முகாமில் வாடும் ஒவ்வொரு போராளியும் சுமந்தது எங்கள் கனவையே!
தமிழீத் தாயகத்தை உருவாக்கி, நாகர் கோவிலில் ஆகுதியாகிய குழந்தைகளுக்கு நாகர் கோவிலில் இந்தியாவுக்கே தெரியும் அளவு நினைவுக் கோபுரம் அமைப்பதே சரியான நினைவு வணக்கமாக இருக்கும்.

அதுவரை, ஒயமாட்டோம் என உறுதி கொள்வோம்!

நன்றி.

1 comment:

  1. ஜெயா அண்ணா, நானும் உங்கள் பக்கம்.

    ReplyDelete

வணக்கம் வாருங்கள் தளத்திற்கு,